முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீர்மிகு சிலம்பும் வேங்கைகானலும்

   தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க பல இலக்கிய அமைப்புகளும், நூல்களும் தமிழில் காணப்பட்டாலும் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மைத்துவம் பெற்றக் காப்பியமான சிலப்பதிகாரம் பற்றி நம்மில் பலர் அறிந்துள்ளோம். சிலப்பதிகாரம் பற்றிய அறிந்த நாம் அது உண்மையா ?பொய்யா? என்று நினைத்ததில்லை. அது கற்பனைக் கதையா? வரலாற்று நிகழ்வா? என்ற சந்தேகம் கொண்டு யாரும் கேட்டதில்லை. கண்ணகி மதுரையை விட்டு சேரநாடு சென்றாள் என்று படித்தறிந்த நாம் அவள் எங்கே  சென்றாள் என்பதைப் பற்றிய சிந்தனைகள் நமக்கு எழுந்ததில்லை .இது எல்லாவற்றையும் விட சேர மன்னன் கோயில் கட்டினான் என்பதைக் குறிப்பு வைத்து படித்த நமக்கு அந்தக் கோயில் எங்கே அமைந்துள்ளது என்றும் தேடும் எண்ணம் ஏன் வரவில்லை? ஒருவேளை உண்மையிலேயே கோயில் இருக்கிறதா இல்லை வெறும் கட்டுக்கதையா ? என்ற இன்றைய பல கேள்விகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது .  வரலாற்று நிகழ்வு   ராமாயணமும் மகாபாரதம் போன்ற புராண இதிகாசம் வரலாறுகளை பற்றி பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சாயல் கொண்டு பேசும் தமிழ் சமூகம், குடிமக்களின் அடிப்படை வாழ்...